திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் மன்றினைச் சேர்ந்த அலுவலர்கள் குழுவொன்று, இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட அனைத்து முப்படை அலுவலர்களின் ஓய்வூதியம் மற்றும் பிற தொடர்புடைய கொடுப்பனவுகளை வழங்கும் ஓய்வூதியத் திணைக்களத்தின் செயல்பாடுகள் பற்றிய புரிதலை பெறும்பொருட்டு 2023.12.14 அன்று ஓர் கல்விச் சுற்றுப்பயணமாக ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருகை தந்தனர்.

இந்த வருகையின் போது ஆயுதப்படை அலுவலர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை கணக்கிடுவதற்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விளக்கம் பெறுவதற்கும், திணைக்களத்தின் பல்வேறு பணிகளைச் செய்யும் பிரிவுகளைப் பார்வையிடுவதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. குழுவில் 47 அலுவலர்கள் இருந்தனர்.

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline