ஓய்வூதிய உரித்துடைய பதவியில் 60 மாதங்கள் மொத்த சேவையை முடித்த, நிரந்தர சேவையில் இருக்கும் போது இறக்கும் அரசு ஊழியர்களை சார்ந்திருப்பவர்களுக்கு ஒருமுறை பலன் அளிக்கும் வகையில் மரணப் பணிக்கொடை வழங்கப்படுகிறது. ஓய்வூதியக் பிரமாணக் குறிப்பின் 2 ஆ(1) ஆம் பிரிவின் கீழ் மரணப் பணிக்கொடைத் தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பின்னணி

சேவையின் போது இறக்கும் ஆண்/பெண் அலுவலர்களின் தங்கிவாழ்பவர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை வழங்கப்படும் பலனாக மரணப் பணிக்கொடை (மப) வழங்கப்படுகிறது. மரணப் பணிக்கொடையை வழங்குவதற்காக ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் 2 ஆ (1) ஆம் பிரிவின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மரணப் பணிக்கொடையை செலுத்துவதற்கு, சில தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.  

  • ஓய்வூதிய உரித்துடைய பதவியில் பணியாற்றல்
  • சேவையில் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
  • 60 மாதங்கள் மொத்த சேவை காலத்தை நிறைவு செய்திருக்க வேண்டும்
  • சேவையில் இருக்கும் போது இறந்திருத்தல் வேண்டும்.

சிவில் அலுவலர்களுக்கு மரணப் பணிக்கொடை வழங்க இலக்க வகை 16 பயன்படுத்தப்படும்

சேவையில் இருக்கும் போது மரணம் அடையும் முப்படைகளின் அலுவலர்களுக்கு மரணப் பணிக்கொடை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் ஆயுதப்படை பிரிவினால் மேற்கொள்ளப்படுகிறது.

பொதுச் சேவையில் இருக்கும் போது மரணம் அடையும் மதகுருமார்களுக்கு, அவர்களிடமிருந்து அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையைத் திரும்பப் பெறுவதற்காக மட்டுமே மரணக் பணிக்கொடை தொகை வழங்கப்படுகிறது.

மரணக் பணிக்கொடைத் தொகைக்கு உரிமையுள்ள நபர்கள்,

  • திருமணமான ஆண்/பெண் பங்களிப்பாளர்களின்
    சட்டப்பூர்வ விதவை/ தபுதாரர், ஆண்/பெண் பங்களிப்பாளர் இறந்த திகதியில் வேலையில்லாத மற்றும் திருமணமாகாத சட்டப்பூர்வ குழந்தைகள்
  • திருமணமாகாத ஆண்/பெண் பங்களிப்பாளர்களின்
    திருமணமாகாத மற்றும் வேலையில்லாத சகோதர சகோதரிகள், திருமணமாகாத ஆண்/பெண் பங்களிப்பாளரால் தந்தை மற்றும் தாய் இருவரும் இறந்திருந்தால்
  • சட்டப்பூர்வ தங்கிவாழ்வோர் இல்லாத பட்சத்தில், அரசாங்கத்திற்குப் பங்களிப்பவர்களான ஆண்/பெண் அலுவலர்களிடமிருந்து பெற வேண்டிய தொகையை அறவிட மட்டுமே மரணக் பணிக்கொடை தொகைக்கான உரிமை வழங்கப்படுகிறது.
வழிமுறை
  1. 1. இயங்கலை முறைமை
  2. 2. இயங்கலையற்ற முறைமை
விண்ணப்ப செயல்முறையில் தொடர்புடைய நிறுவனத்தின் பங்கு  

இயங்கலை முறைமை

  • நிறுவனத்திற்குப் பொறுப்பான அலுவலர், ஆண்/பெண் பங்களிப்பாளரின் தனிநபர் கோவை ஊடாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  •  விதவைகள் / தபுதாரர்கள்  / அனாதைகள் / பெற்றோர் / சகோதர சகோதரிகளிடமிருந்து விவரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் பெறப்பட்டவுடன், (பிறப்பு, திருமணம், இறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி, வங்கி கணக்கு புத்தகங்களின் பிரதிகள், தங்கி வாழ்பவர்களுக்கான அறிக்கைகள் போன்றவை) கீழ்கண்ட நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர் எடுக்க வேண்டும்.

3

இயங்கலையற்ற முறைமை

பின்வரும் சந்தர்பங்கள் தொடர்பாக மரணப் பணிக்கொடைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்போது, 9/2015 ஆம் இலக்க ​​ஓய்வூதியச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பம் மற்றும் ஏனைய ஆவணங்களை ஓய்வூதியத் திணைக்களத்தின் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியப் பிரிவிற்கு  அலுவலர் கடைசியாக பணியாற்றிய நிறுவனத்தின்  ஊடாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

  • 01.01.2006க்கு முன் இறந்த ஆண்/பெண் அலுவலர்களுக்கான மரணப் பணிக்கொடை வழங்குதல்.
  • பயங்கரவாத நடவடிக்கைகளால் இறந்த ஆண்/பெண் அலுவலர்களுக்கான மரணப் பணிக்கொடை வழங்குதல்
  • ஒன்று அல்லது பல தங்கிவாழ்வொருக்கு உரிமையுள்ள மரணப் பணிக்கொடை தொகையின் பாகங்களைத் தக்கவைத்துக்கொள்ளும் பிற சார்ந்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் மரணப் பணிக்கொடை தொகையின் பகுதிகளைச் செலுத்துதல்.

இறந்த ஆண்/பெண் பங்களிப்பாளரின் தனிநபர் கோவை மூலம் விடயத்திற்குப் பொறுப்பான அலுவலரால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விதவைகள்/ தபுதாரர்கள்/ அனாதைகள்/ பெற்றோர்/ சகோதர சகோதரிகள் (மரணச் சான்றிதழ்/ பிறப்பு சான்றிதழ் / திருமணச் சான்றிதழ் ஆகியவற்றின் பிரதி, தேசிய அடையாள அட்டைகளின் பிரதி போன்றவை) ஆவணங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய தகவல்.

பழைய பிடி 5 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நிறுவனத் தலைவரால் சான்றளிக்கப்பட்டு, தொடர்புடைய பிற ஆவணங்களுடன் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் இயங்கலை மூலம் அனுப்பப்படும் (இயங்கலை)

09/2015 (III) ஆம் இலக்க ஓய்வூதிய சுற்றறிக்கையின்படி இயங்கலை முறை மூலம் விண்ணப்பங்கள் மேலே 02.1.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் தவிரந்த எல்லா சந்தர்ப்பத்திலும் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் விண்ணப்பத்துடன் தொடர்புடைய தரவுகளை மட்டும் தரவு முறைமையில் பதிவேற்றம் செய்யவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் மற்றும் அனைத்து ஆவண சான்றுகளும் ஓய்வூதிய திணைக்களத்திற்கு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

இயங்கலையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக திணைக்களம் பின்பற்ற வேண்டிய செயல்முறை

5.2

இயங்கலை அல்லாத முறையின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் மீது திணைக்களம் பின்பற்றவேண்டிய செயல்முறை

5.3

தேவையான ஆவணங்கள்
  • பிடி 5 விண்ணப்ப (இயங்கலை அல்லது முந்தைய விண்ணப்பம்)
  • அலுவலரின் தேசிய அடையாள அட்டையின் பிரதி
  • அலுவலரின் மரணச் சான்றிதழ்
  • அலுவலரின் மரணச் சான்றிதழ்
  • வாழ்க்கைத் துணையின் பிறப்புச் சான்றிதழின் பிரதி
  • தங்கிவாழ்வோரின் பிறப்புச் சான்றிதழ்
  • திருமணச் சான்றிதழ்
  • வரலாற்று தாள்
  • மனைவியின் தேசிய அடையாள அட்டையின் பிரதி
  • அலுவலரின் நிரந்தர மற்றும் ஓய்வூதிய உரித்துடைய நியமனக் கடிதம்
  • நியமனத்தை உறுதிப்படுத்தல் கடிதம்
  • தங்கிவாழ்வோரின் தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகள்
  • உரிமைகோராச் சான்றிதழ் (அரசுக்குச் செலுத்த வேண்டிய அனைத்துத் தொகைகளையும் சரியாகச் உள்ளிடல்)
  • தங்கிவாழ்வோர் தொடர்புடைய அறிக்கை (கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரால் கையொப்பமிடப்பட்டது)
  • இறந்த அலுவலரின் பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், நிறுவனத் தலைவரின் உறுதிப்படுத்தல்.
  • மனைவியின் பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால் சத்தியக் கடிதம் அல்லது ஏதேனும் ஆவணச் சான்று.
  • 03/2016 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி சம்பள மாற்றக் கடிதம்.
  • சேவை முறிவுகள் கண்டறியப்பட்டால், உறுதிப்படுத்தலுக்கான கடிதங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள். (பதவி வெறிதாக்கல்/ பதவித் தடை/மீண்டும் பணியமர்த்தல் கடிதம்)
  • தங்கிவாழ்வோர்  இறந்திருந்தால் அவர்களின் மரணச் சான்றிதழ்.
  • சம்பளமற்ற அல்லது சேவைக் முறிவு காலங்கள் கண்டறியப்பட்டால், விதவைகள் மற்றும் அனாதைகள் நிதிக்கான பங்களிப்புகள் அறவிடப்பட்டதை  உறுதிப்படுத்தும் அறிக்கை.
  • நாளாந்த ஊதிய சேவை காலம் இருந்தால், பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்,
    • அந்த சேவை தொடர்பான நியமனக் கடிதம்
    • வரலாற்றுத் தாள் [படிவம் பொது 226(அ)]
  • பல திருமணங்கள் இருந்தால், ஒவ்வொரு திருமணத்திற்கும் தொடர்புடைய பின்வரும் ஆவணங்கள், 
    • திருமணச் சான்றிதழ்
    • வாழ்க்கைத் துணைவர்களின் மரணச்  சான்றிதழ்கள்
    • விவாகரத்துகளின் முற்றான தீர்வை - நீதிமன்றத்தின் பதிவாளரால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்
பயன்படுத்தப்படும் கட்டளைச் சட்டம், சட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகள்

மரணப் பணிக்கொடைக்குத் தகுதியுள்ள அலுவலர்களில்  தங்கிவாழ்பவர்களுக்கு மரணப் பணிக்கொடை கொடுப்பனவு செய்யப்பட்டால், வி&அஓ  கொடுப்பனவு செலுத்துதலும் விடயத்துடன் சம்பந்தப்பட்ட அலுவலரால் செய்யப்படும்.

இயங்கலை அல்லாத முறைமையின் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள்
  • 2006.01.01 க்கு முன்னர் இறந்த அலுவலர்களின் சம்பள விவரங்கள் தரவு முறைமையில் சேர்க்காத போது..
  • மரணப் பணிக்கொடை  தொகையின் சில பகுதிகளைத் தக்க வைத்துக் கொண்டு பணம் செலுத்த இயலாத போது.
  • பதவிகளுக்கு இடையே மாற்றம் உள்ளபோது சம்பளத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக தரவு முறைமையில் சம்பளக் குறியீடுகளைச் சேர்க்காத போது
  • இறந்த அலுவலரது தேசிய அடையாள அட்டை இல்லாதபோது.

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline